முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 183. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 183. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி ஆற்றாளென்று எண்ணி வருந்திய தோழியை நோக்கி, “கார் காலத்துக்குரிய அடையாளங்களை அவர் கண்டு என்னை நினைந்து வருவர்” என்பதுபடத் தலைவி கூறியது.)
சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ நம்போற் பசக்குங் காலைத் தம்போற் சிறுதலைப் பிணையிற் றீர்த்த நெறிகோட் டிரலை மானையுங் காண்பர்கொல் நமரே புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை |
5 |
மென்மயில் எருத்தில் தோன்றும் கான வைப்பிற் புன்புலத் தானே. |
|
- அவ்வையார். |
முடிபு: புன்புலத்தான் கொன்றையம் பசுவீ பசக்குங் காலைப்பிணையிற்றீர்ந்த இரலை மானையும் நமர் காண்பர்கொல்?
கருத்து: கார்காலம் வந்ததை அறிந்து தலைவர் விரைவில் வந்துவிடுவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 181 | 182 | 183 | 184 | 185 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 183. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, முல்லை, பசக்குங், காண்பர்கொல், தலைவர், பசுவீ, சென்ற, எட்டுத்தொகை, சங்க, கொன்றையம்