முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 171. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 171. மருதம் - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அயலார் வரையப் புக்கனராக, அதுகண்டு கவன்ற தோழிக்கு, “இவர்கள் செய்யும் முயற்சி பயன்படாதொழியும்” எனத் தலைவி கூறியது.)
காணினி வாழி தோழி யாணர்க் கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட மீன்வலை மாப்பட் டாஅங் கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே. |
|
- பூங்கணுத்திரையார். |
முடிபு: தோழி, காண்; நொது மலர்தலை இது எவன்?
கருத்து: அயலார் வரைவுமேற்கொள்வதனாற் பயனொன்று மில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 169 | 170 | 171 | 172 | 173 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 171. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, மருதம், குறுந்தொகை, கூற்று, முயற்சி, எட்டுத்தொகை, சங்க, அயலார்