முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 161. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 161. குறிஞ்சி - தலைவி கூற்று
(தாய் உறங்காமல் விழித்திருந்தமையால் தலைவன் இரவில் வந்தும் அவனைக் காணுதற்கு இயலாத தலைவி மறுநாள் அவன் வந்து மறைவில் நிற்பதை யறிந்து, “நேற்று அன்னை விழித்திருந்தாள். தலைவன் வந்தா னென்பதை யான் உணர்ந்தும் பயனிலதாயிற்று” என்று தோழியை நோக்கிக் கூறியது.)
பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப் புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி அன்னா வென்னும் அன்னையு மன்னோ என்மலைந் தனன்கொல் தானே தன்மலை |
5 |
ஆரம் நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே. |
|
- நக்கீரனார். |
முடிபு: பொழுதும் எல்லின்று: பெயலும் வீசும்; அன்னையும் அன்னாவென்னும்; மார்பினன் வந்து நின்றனன்; என் மலைந்தனன் கொல்?
கருத்து: நேற்றுக் காப்புமிகுதியால் தலைவனைக் காணப்பெற்றேனில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 159 | 160 | 161 | 162 | 163 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 161. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, வந்து, தலைவன், குறுந்தொகை, கூற்று, பெயலும், வீசும், மார்பினன், எல்லின்று, பொழுதும், அவன், சங்க, எட்டுத்தொகை