முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 158. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 158. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் இரவுக்காலத்தில் வந்து அளவளாவுங்காலத்து ஒரு நாள் பெருமழை உண்டாயிற்றாக, அவனது வரவுக்குத் தடை நிகழுமோவென அஞ்சிய தலைவி அவ்வச்சத்தைத் தலைவன் வந்த பின்னர் அம்மழையை நோக்கிக் கூறுவாளாய் அவன் கேட்பக் கூறியது.)
நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும் கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக் காலொடு வந்த கமஞ்சூல் மாமழை ஆரளி யிலையோ நீயே பேரிசை இமயமும் துளக்கும் பண்பினை |
5 |
துணையிலர் அளியர் பெண்டிர் இதெவனோ. | |
- அவ்வையார். |
முடிபு: மாமழை, நீ அளியிலையோ? இமயமும் துளக்கும் பண்பினை; பெண்டிர் துணையிலர்; அளியர்; இஃது எவன்?
கருத்து: இதுகாறும் தலைவர் வாராமையின் இப்பெருமழையினால் அவர் வரவு தடைப்படுமோ வென்று அஞ்சினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 156 | 157 | 158 | 159 | 160 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 158. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, வந்த, அளியர், துணையிலர், நிறைந்த, பெரிய, பண்பினை, பெண்டிர், இடிக்கும், சங்க, எட்டுத்தொகை, தலைவன், மாமழை, இமயமும், துளக்கும்