முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 154. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 154. பாலை - தலைவி கூற்று
(பொருளீட்டும் பொருட்டுத் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைந்து, “என்னைப் பிரிந்து நெடுந்தூரத்தில்தங்கும் வன்மையை அவர் எங்ஙனம் பெற்றார்?” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறியது.)
யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின் உரிநிமிர்ந் தன்ன உருப்பவி ரமையத் திரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப் பொறிமயிர் எருத்திற் குறுநடைப் பேடை பொறிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத் |
5 |
தயங்க விருந்து புலம்பக் கூஉம் அருஞ்சுர வைப்பிற் கானம் பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே. |
|
- மதுரைச் சீத்தலைச் சாத்தனார். |
முடிபு: தோழி, கானம் பிரிந்து உறைதல் வல்லுவோர் யாங்கு அறிந்தனர்?
கருத்து: தலைவர் என்னைப் பிரிந்து எங்ஙனம் ஆற்றியிருக்கின்றனர்?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 152 | 153 | 154 | 155 | 156 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 154. பாலை - தலைவி கூற்று, பிரிந்து, பாலை, இலக்கியங்கள், தலைவி, குறுந்தொகை, தோழி, கூற்று, தலைவர், கானம், எங்ஙனம், சென்ற, எட்டுத்தொகை, சங்க, நினைந்து