முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 149. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 149. பாலை - தலைவி கூற்று
(தோழி தலைவனுடன் போகவேண்டுமென்று கூறத் தலைவி அவனுடன் செல்லுதலால் நாண் அகலுமென்று இரங்கிக் கூறியது.)
அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே இனியே வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் |
5 |
காம நெரிதரக் கைந்நில் லாவே. | |
- வெள்ளி வீதியார். |
முடிபு: நாண் நனி நீடுழந்தன்று; கைந்நில்லாது; அளிது.
கருத்து: யான் தலைவனுடன் செல்லுதலால் நாணழியும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 147 | 148 | 149 | 150 | 151 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 149. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, செல்லுதலால், தலைவனுடன், நாண், சங்க, எட்டுத்தொகை, தோழி