முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 130. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 130. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் இவ்வுலகில் எங்கேனும் ஓரிடத்தில் இருப்பார்; அவரைத் தேடித் தருவேன்” என்பதுபடத் தோழி கூறியது.)
நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரும் உளரோநம் காதலோரே. |
5 |
- வெள்ளி வீதியார். |
முடிபு: நம் காதலோர் புகாஅர்: ஏறார்; செல்லார்; தேரிற் கெடுநரும் உளரோ?
கருத்து: தூதுவிட்டுத் தலைவரைத் தேடித் தருகுவன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 128 | 129 | 130 | 131 | 132 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 130. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், செல்லார், பாலை, தோறும், கூற்று, குறுந்தொகை, ஏறார், குடிமுறை, கெடுநரும், ஊரின், தேரிற், புகாஅர், எட்டுத்தொகை, சங்க, தேடித், நாட்டின்