முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 117. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 117. நெய்தல் - தோழி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக, அவ்வொழுக்கத்தால் வரும் அச்சத்தினும் அவன் வாராதமைவதால் வரும் துன்பம் பொறுத்துக் கொள்ளுதற்கரியது என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி வரைவின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)
மாரி ஆம்ப லன்ன கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர் கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன் வாரா தமையினும் அமைக |
5 |
சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே. | |
- குன்றியனார். |
முடிபு: துறைவன் வாராதமையினும் அமைக; விலைஞர் கைவளை சிறியவும் ஈண்டு உள.
கருத்து: தலைவன் வரைந்து கொள்ளாமையால் உண்டான மெலிவை நாம் மறைத்து ஒழுகுவோமாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 115 | 116 | 117 | 118 | 119 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 117. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், நெய்தல், தலைவன், குறுந்தொகை, கூற்று, அமைக, சிறியவும், செல்லும், துறைவன், இங்கே, வரும், சங்க, வரைந்து, எட்டுத்தொகை, அஞ்சிய