அகநானூறு - 8. குறிஞ்சி
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், அரிய அல்லமன் இகுளை! 'பெரிய |
5 |
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, |
10 |
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் |
15 |
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ஏற்றை