அகநானூறு - 68. குறிஞ்சி
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் |
5 |
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என, முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே; பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள், அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் |
10 |
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச் சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின் படர்ந்த உள்ளம் பழுது அன்றாக, வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் |
15 |
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப, கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன் வெண் கோட்டு யானை விளி படத் துழவும் அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் |
20 |
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே. |
தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - ஊட்டியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வாழி, கடுஞ், தோழி, அன்னை, வேண்டு, கேட்டியோ