அகநானூறு - 48. குறிஞ்சி
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள், |
5 |
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி, |
10 |
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி, வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு, 'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு, எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, |
15 |
நாணி நின்றனெமாக, பேணி, 'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப் பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப் பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, |
20 |
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச் சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே. பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து, அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன் மகனே தோழி!' என்றனள். |
25 |
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே. |
செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது. - தங்கால் முடக் கொற்றனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மற்று, எம்முள், தோழி, புலி, திறம், மகள், அதன், நின்