அகநானூறு - 387. பாலை
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய், அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்! வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் |
5 |
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல், அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப் பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ, வரிப் புற இதலின் மணிக் கட் பேடை |
10 |
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட் செங் கால், சேவல் பயிரும் ஆங்கண், வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி, நல் இசை நிறுத்த நாணுடை மறவர் நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது, |
15 |
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி சிறிய தெற்றுவதுஆயின், 'பெரிய ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும், நின்றாங்குப் பெயரும் கானம் சென்றோர்மன்' என இருக்கிற்போர்க்கே. |
20 |
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 385 | 386 | 387 | 388 | 389 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கிடந்த