அகநானூறு - 379. பாலை
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய, தெருளாமையின் தீதொடு கெழீஇ, அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து, ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே! நினையினைஆயின், எனவ கேண்மதி! |
5 |
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை, பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி, நனவின் இயன்றதுஆயினும், கங்குல் கனவின் அற்று, அதன் கழிவே; அதனால், விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி, |
10 |
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப, செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு, எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி, மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் |
15 |
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின் பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி, செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு, உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல், |
20 |
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள் மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர, ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று, உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த |
25 |
நிரம்பா நீள் இடைத் தூங்கி, இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே? |
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 377 | 378 | 379 | 380 | 381 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பொருள், வந்து, அசைஇய, பாலை