அகநானூறு - 364. முல்லை
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து, ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க, ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன் |
5 |
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ, முல்லை இல்லமொடு மலர, கல்ல பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர, கார் தொடங்கின்றே காலை; காதலர் வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை, |
10 |
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்; யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக் கொலை குறித்தன்ன மாலை துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே! |
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 362 | 363 | 364 | 365 | 366 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - முல்லை