அகநானூறு - 361. பாலை
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண், மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன, திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண், அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், |
5 |
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய், பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே! கரியாப் பூவின் பெரியோர் ஆர, |
10 |
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு, உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று, சில் மொழி, அரிவை தோளே பல் மலை வெவ் அறை மருங்கின் வியன் சுரம், |
15 |
எவ்வம் கூர, இறந்தனம், யாமே. |
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 359 | 360 | 361 | 362 | 363 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மொழி, பூவின்