அகநானூறு - 356.மருதம்
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை உகு வார் அருந்த, பகு வாய் யாமை கம்புள் இயவன் ஆக, விசி பிணித் தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என் |
5 |
பொற் தொடி முன்கை பற்றினனாக, 'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே, தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில் சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கற் போல் நாவினேனாகி, மற்று அது |
10 |
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க் கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் நல்லடி உள்ளானாகவும், ஒல்லார் கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று, |
15 |
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது, கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே அருவி ஆம்பல் கலித்த முன்துறை நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே? |
20 |
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 354 | 355 | 356 | 357 | 358 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - குறை, நன்னன்