அகநானூறு - 348. குறிஞ்சி
என் ஆவதுகொல் தானே முன்றில், தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் |
5 |
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, |
10 |
'யானை வவ்வின தினை' என, நோனாது, இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே? |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 346 | 347 | 348 | 349 | 350 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -