அகநானூறு - 344. முல்லை
| வள மழை பொழிந்த வால் நிறக் களரி, உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத் தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின், வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர் கை மாண் தோணி கடுப்ப, பையென, |
5 |
| மயிலினம் பயிலும் மரம் பயில் கானம் எல் இடை உறாஅ அளவை, வல்லே, கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க, நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து, |
10 |
| இயக்குமதி வாழியோ, கையுடை வலவ! பயப்புறு படர் அட வருந்திய நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே! |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 342 | 343 | 344 | 345 | 346 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வால்

