அகநானூறு - 34. முல்லை
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன இரு திரி மருப்பின் அண்ணல் இரலை செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் |
5 |
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, தௌ அறல் தழீஇய வார் மணல் அடைகரை, மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற, செல்க, தேரே நல் வலம் பெறுந! |
10 |
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி துறை விட்டன்ன தூ மயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, 'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, |
15 |
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென மழலை இன் சொல் பயிற்றும் நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -