அகநானூறு - 330. நெய்தல்
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும், வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு |
5 |
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்! செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று, தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும், காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ? |
10 |
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே; குப்பை வெண் மணற் குவவுமிசையானும், எக்கர்த் தாழை மடல்வயினானும், ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த |
15 |
கடுஞ் செலல் கொடுந் திமில் போல, நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே! |
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 328 | 329 | 330 | 331 | 332 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - குறை, துயர்