அகநானூறு - 323. பாலை
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின் செய்வோர் ஏச் சொல் வாட, காதலர் வருவர் என்பது வாய்வதாக, ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின் அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத் |
5 |
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, காணிய வம்மோ? கற்பு மேம்படுவி! பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து, யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின் |
10 |
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு ஆலி அழி துளி தலைஇக் கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே! |
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பறநாட்டுப் பெருங்கொற்றனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 321 | 322 | 323 | 324 | 325 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின்