அகநானூறு - 315. பாலை
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின; பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண் கண் துணை ஆக நோக்கி, நெருநையும், அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், |
5 |
அறியாமையின் செறியேன், யானே; பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள், சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி, புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் |
10 |
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய், அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப, வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென, கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி, சேக்குவள் கொல்லோதானே தேக்கின் |
15 |
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை, ஊன் புழுக்கு அயரும் முன்றில், கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே. |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 313 | 314 | 315 | 316 | 317 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - காய், துணை