அகநானூறு - 307. பாலை
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய், அகல் எழில் அல்குல் அவ் வரி வாட, பகலும் கங்குலும் மயங்கி, பையென, பெயல் உறு மலரின் கண் பனி வார, ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து, |
5 |
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை அடு முரண் தொலைத்த நெடு நல் யானை மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து, இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை, பெருங் கை எண்கினம் குரும்பி தேரும் |
10 |
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில், கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது, இரும் புறாப் பெடையொடு பயிரும் பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே? |
15 |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 305 | 306 | 307 | 308 | 309 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெருங்