அகநானூறு - 294. முல்லை
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி, துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப் புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய, காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் நீர் வார் கண்ணின் கருவிளை மலர, |
5 |
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர் இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர, அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல் கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, |
10 |
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள், 'காய் சின வேந்தன் பாசறை நீடி, நம் நோய் அறியா அறனிலாளர் இந் நிலை களைய வருகுவர்கொல்?' என ஆனாது எறிதரும் வாடையொடு |
15 |
நோனேன் தோழி! என் தனிமையானே. |
பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 292 | 293 | 294 | 295 | 296 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - காய், வார், நீர்