அகநானூறு - 282. குறிஞ்சி
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய, செறி மடை அம்பின், வல் வில், கானவன் பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு, நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன், கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, |
5 |
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு, சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார் வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு |
10 |
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய் அம்பல் ஊரும் அவனொடு மொழியும்; சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி, யாயும், 'அவனே' என்னும்; யாமும், |
15 |
'வல்லே வருக, வரைந்த நாள்!' என, நல் இறை மெல் விரல் கூப்பி, இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 280 | 281 | 282 | 283 | 284 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தலைமகன், நீர், கொண்டு, பொருது, சிலம்பின்