அகநானூறு - 28. குறிஞ்சி
மெய்யின் தீரா மேவரு காமமொடு எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி! கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே அருவி ஆன்ற பைங் கால் தோறும் இருவி தோன்றின பலவே. நீயே, |
5 |
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி, பரியல் நாயொடு பல் மலைப் படரும் வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின் பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து, கிள்ளைத் தௌ விளி இடைஇடை பயிற்றி, |
10 |
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை, 'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என, பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின், உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ஆங்கு, எழுந்து, தோழி