அகநானூறு - 265. பாலை
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து, பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும் இமயச் செவ் வரை மானும்கொல்லோ? பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை |
5 |
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ? எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல், குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து, ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு |
10 |
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து, இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து, அணங்கு அரு மரபின் பேஎய் போல விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க, |
15 |
துகள் அற விளைந்த தோப்பி பருகி, குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் புலாஅல் கையர், பூசா வாயர், ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் |
20 |
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ, வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர் நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே! |
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 263 | 264 | 265 | 266 | 267 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -