அகநானூறு - 261. பாலை
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர, சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த் தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல் இலங்கு வளை தௌர்ப்ப வீசி, சிலம்பு நகச் |
5 |
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின் அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய், நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு, |
10 |
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு வில்லோர் குறும்பில் ததும்பும், வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே. |
15 |
புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 259 | 260 | 261 | 262 | 263 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மெல், சில், பாலை