அகநானூறு - 252. குறிஞ்சி
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி, வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப் பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி, |
5 |
தனியன் வருதல் அவனும் அஞ்சான்; பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட, எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்; யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத் துய் அவிழ் பனி மலர் உதிர வீசித் |
10 |
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல், எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப் பெருங் குளம் காவலன் போல, அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே? |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கண்ணையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 250 | 251 | 252 | 253 | 254 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -