அகநானூறு - 248. குறிஞ்சி
நகை நீ கேளாய் தோழி! அல்கல்; வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ, இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து, அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற |
5 |
தறுகட் பன்றி நோக்கி, கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது, 'அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்' என, எய்யாது பெயரும் குன்ற நாடன் |
10 |
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து, ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை, ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர, இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை; வல்லே என் முகம் நோக்கி, |
15 |
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந்தோளே. |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 246 | 247 | 248 | 249 | 250 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்து, நோக்கி, தோழி