அகநானூறு - 240. நெய்தல்
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத் தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் |
5 |
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி, யாயும் ஆயமோடு அயரும்; நீயும், தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, |
10 |
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து, இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர், பூ வேய் புன்னை அம் தண் பொழில், வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. |
15 |
தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 238 | 239 | 240 | 241 | 242 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நெய்தல்