அகநானூறு - 233. பாலை
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின் அலர் முலை நனைய, அழாஅல் தோழி! எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென, ஊன் இல் யானை உயங்கும் வேனில், |
5 |
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின், துறக்கம் எய்திய தொய்யா நல் இசை முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல் பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல் கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு, |
10 |
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ, பொருள்வயின் நீடலோஇலர் நின் இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே. |
15 |
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 231 | 232 | 233 | 234 | 235 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, நின்