அகநானூறு - 222. குறிஞ்சி
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக் கான நாடன் உறீஇய நோய்க்கு, என் மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்; முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண், கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும், |
5 |
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின், ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ, தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின், மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த ஆதிமந்தி காதலற் காட்டி, |
10 |
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர், சென்மோ வாழி, தோழி! பல் நாள், உரவு உரும் ஏறொடு மயங்கி, இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே. |
15 |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 220 | 221 | 222 | 223 | 224 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி