அகநானூறு - 218. குறிஞ்சி
| 'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, |
5 |
| புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, படாஅவாகும், எம் கண்' என, நீயும், 'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, |
10 |
| வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய், வர எளிதாக எண்ணுதி; அதனால், நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் |
15 |
| அடைய முயங்கேம்ஆயின், யாமும் விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே அன்னை அறியினும் அறிக! அலர் வாய் அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, |
20 |
| ஒண் பூ வேங்கை கமழும் தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! |
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 216 | 217 | 218 | 219 | 220 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், கமழும், விறல், நாள், இருள், பெரு

