அகநானூறு - 194. முல்லை
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை, ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப் புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து, ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால், வித்திய மருங்கின் விதை பல நாறி, |
5 |
இரலை நல் மானினம் பரந்தவைபோல், கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர், கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி, களை கால் கழீஇய பெரும் புன வரகின் கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, |
10 |
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை காமர் கலவம் பரப்பி, ஏமுறக் கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து, கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் |
15 |
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக் கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி, விரிஉளை, நல் மான் கடைஇ வருதும்' என்று அவர் தௌத்த போழ்தே. |
பருவம் கண்டு ஆற்றாமை மீதூர, தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 192 | 193 | 194 | 195 | 196 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புறம், பெரும்