அகநானூறு - 188. குறிஞ்சி
| பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ! இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ, போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர் அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர் |
5 |
| கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி, நாளும் கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி, பொலிந்த ஆயமொடு காண்தக இயலி, |
10 |
| தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும், அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும், குறமகள் காக்கும் ஏனல் புறமும் தருதியோ? வாழிய, மழையே! |
இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வீரை வெளியன் தித்தனார்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 186 | 187 | 188 | 189 | 190 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -

