அகநானூறு - 174. முல்லை
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து, ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும் செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என, பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச் செல்வேம்ஆதல் அறியாள், முல்லை |
5 |
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து, காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து, பழங்கண் கொண்ட பசலை மேனியள், யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை |
10 |
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள, ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள், நல் மணல் வியலிடை நடந்த சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே? |
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 172 | 173 | 174 | 175 | 176 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - முல்லை