அகநானூறு - 17. பாலை
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும், இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், 'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ, மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென, முயங்கினள் வதியும்மன்னே! இனியே, |
5 |
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி, நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி வல்லகொல், செல்லத் தாமே கல்லென |
10 |
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின், நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த, கொடுங் கோல் உமணர், பகடு தெழி தௌ விளி நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும், கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல், |
15 |
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின், நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர், விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர், நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, |
20 |
வைகுறு மீனின் தோன்றும் மை படு மா மலை விலங்கிய சுரனே? |
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெருங், கெழு