அகநானூறு - 161. பாலை
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி வடியாப் பித்தை, வன்கண், ஆடவர் அடி அமை பகழி ஆர வாங்கி; வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை, படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி |
5 |
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக் கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், |
10 |
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள் சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த நல் வரல் இள முலை நனைய; பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ. |
பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப் புல்லங்கண்ணனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 159 | 160 | 161 | 162 | 163 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -