அகநானூறு - 121. பாலை
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல் வேனில் நீடிய வான் உயர் வழிநாள், வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, |
5 |
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி, சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு தான் வரும் என்ப, தட மென் தோளி |
10 |
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து வெருள் ஏறு பயிரும் ஆங்கண், கரு முக முசுவின் கானத்தானே. |
15 |
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 119 | 120 | 121 | 122 | 123 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -