அகநானூறு - 118. குறிஞ்சி
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன், தேம் கமழ் இணர வேங்கை சூடி, தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ, மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து, இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட, |
5 |
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள, இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப் பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். |
10 |
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள் புணர் குறி செய்த புலர்குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள்; அளியள்தான், நின் அளி அலது இலளே! |
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 116 | 117 | 118 | 119 | 120 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாள், அஞ்சுதும்