அகநானூறு - 109. பாலை
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ் நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி, நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் காடு கால்யாத்த நீடு மரச் சோலை |
5 |
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை, வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச் சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென, வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், |
10 |
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப் பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் அறன் இல் வேந்தன் ஆளும் வறன் உறு குன்றம் பல விலங்கினவே. |
15 |
இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக் காவினார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 107 | 108 | 109 | 110 | 111 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -