அகநானூறு - 101. பாலை
அம்ம வாழி, தோழி! 'இம்மை நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும் தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்? தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர் |
5 |
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல் தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி, நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து அடி புதை தொடுதோல் பறைய ஏகி, கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், |
10 |
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு, அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல, பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை, புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர், |
15 |
தண் கார் ஆலியின், தாவன உதிரும் பனி படு பல் மலை இறந்தோர்க்கு முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே! |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 99 | 100 | 101 | 102 | 103 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி