புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 163
பாரப்பா பவுமனுமே வியமாறெட்டில் |
மற்றொரு விஷயத்தையும் நீ நோக்குக. சேய் என அழைக்கப்படும் செவ்வாய் 12,6,8 ஆகிய இடங்களில் நிற்க சுக்கிரன் பகை வீடடைய அச்சென்மனுக்கு ஏற்படும் பலன்களாவன: அவனது ஜென்ம பூமி (பிதுர்களின் சொத்து) வந்தடையும், நீரினால் கேடுண்டாதலும் நேரும். ஊருக்கு அருகே கிழக்குத் திசையும் மேற்குத்திசையும் உத்தமமான நற்பலன் தரும். அதோடு புஞ்சை நிலத்தால் வெகுலாபம் ஏற்படும். போகரது அருளாணைப்படி அச்சென்மன் கையில் தங்கமானது ஜ்வலித்துச் சிரிக்கும் என்று அவரருளாலே புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 161 | 162 | 163 | 164 | 165 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 163 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -