புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 161
கூறேநீ உப்பரிகை மாடகூடம் |
மேலும் ஒன்றையும் நீ கூறுவாயாக! அச்சென்மனுக்கு (மேற்குறித்த பாட்டின்படி பிறந்தோனுக்கு) உப்பரிகையும், மாடகூடமும் ஏற்படும். அவனுக்கு சயன சுகம் வாய்க்கும். நிறைந்த யோகம் உள்ளவன். வாகனயோகமும் கொண்ட இருநிதிக் கிழவன் அவன். இப்பூமியிலே நீண்ட ஆயுளுடன் வேசியரைக் கூடுவதில் விருப்புடையவனாக இருப்பான். இவர்களோடு அசுப கிரகங்கள் சேர்ந்திருப்பினும் மேற்குறித்த பலன்கள் கெட்டாலும் வீடுண்டு. இலக்கினத்ததிபன் 12-இல் உச்சமானால் சிவபரம் பொருளின் பேரருளால் துன்பமும் இன்பமும் விரவி வரும் என்பதையும் புலப்படுத்துவாயாக எனப்போகரது அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 159 | 160 | 161 | 162 | 163 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 161 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -