புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 164
தானென்ற பஞ்சமத்தில் கொடியோர் நிற்கில் |
மேலும் ஒன்றைக் கூறுகிறேன். கேட்பாயாக! பஞ்சமஸ்தானம் எனக்கூறப்படும் ஐந்தாம் இடத்தில் தீய கோள்கள் இருப்பின் இப்பூமியின் கண் அச்சாதகனின் குடும்பம் விளக்கமுறச் செய்யும் புத்திரரில்லையென்று கூறுக. இலக்கினாதிபதி சுபர்களுடன் கூடி அதன் பயானாகப் பிறந்த ஒரு பாலனும் அவர்தம் பிதுருக்கு உதவாதவனாக பறைச்சேரியில் வில்வமரம் முளைத்தால் எவ்வாறு பயன்படாதோ அதேபோல் உதவியாக இரான் என்று போகமா முனிவர் பேரருட்கருணை கொண்டு புலிப்பாணிபுகன்றேன். மேலும் இராகு கேந்தரத்தில் இருக்க கேதுவின் நிலையையும் நீ நன்கு ஆராய்வாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 162 | 163 | 164 | 165 | 166 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 164 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -