புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 141
ஆரடா குருபுந்தி வெய்யோன் வெள்ளி |
இன்னமொரு கருத்தினையும் நான் உனக்குச் சொல்கிறேன். கேட்பாயாக! தேவகுருவான் வியாழனும் புதனும் சூரியனும் சுக்கிரன் தானும் இணைந்து நிற்கப் பிறந்த சாதகன் சிறப்புடையவனே யாவான். செம்பொன் இச்சென்மனுக்கு மிகவும் வாய்க்கும். திடமாக போகங்களை இப்பூமியிலே அனுபவிப்பான். இனி குருவும் சுக்கிரனும் சூரியனும் செவ்வாயும் சேர அச்சாதகன் வெகு குடும்பியாவான், செல்வாக்கும் நிதியும் உள்ளவனாவான். கண்பார்வையும் இச்சாதகனுக்கு மிகவும் உண்டாம் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 139 | 140 | 141 | 142 | 143 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 141 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -