புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 143
பாரப்பா பவுமனுக்கு நாலேழ்வெள்ளி |
மற்றொரு கருத்தினையும் நீ மனங் கொண்டு கேட்பாயாக! பவுமனென்று பலராலும் புகழப்படும் செவ்வாய்க்கு 4,7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நிற்கவும், சுக்கிரனுக்கு 5,7,11 ஆகிய இடங்களில் சிறப்புடைய செவ்வாய் நிற்கவும் பிறந்த சாதகன் இந்தப் பூமியில் மிகவும் சிறப்போடு வாழ்பவனேயாவான். இலக்கினாதிபதி இச்சாதகனுக்கு கேந்திர திரகோணத்தில் அமையின் வாகன யோகமும் நற்றொழிற் சேர்க்கையும், எல்லா வகையான பாக்கியங்களும் நல்ல விளைச்சலைத் தரும் நிலமும் வாய்க்கும். இதனை தசாபுத்தி அறிந்து இதமாகக் கூறியருள்வாயாக என்று போகரது அருளாணையால் புகன்றேன் நான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 141 | 142 | 143 | 144 | 145 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 143 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -