விஷ்ணு புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
பிரகலாதன் கதை
தைத்தியர்கள் என்றழைக்கப்பட்ட அசுரர்கள் பரம்பரையில் வந்தவன் ஹிரண்யகசிபு என்பவன். மாபெரும் தவங்கள் செய்து மூன்று லோகங்களையும் ஆளும் சக்தியைப் பெற்றான். அன்றியும் இந்திரன், அக்னி, யமன், நிருதி வருணன், வாயு, குபேரன் ஆகிய தெய்வங்களையெல்லாம் வென்று அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து துரத்தி விட்டான். அவர்கள் அனைவரும் இங்குமங்குமாக அலைந்து திரிந்து கடைசியில் விஷ்ணுவிடம் சரணடைந்தனர்.
எல்லோரையும் வென்று விட்ட காரணத்தால் ஹிரண்ய கசிபு தனக்குமேல் யாரும் இல்லை, இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டான். அதனால் தைத்தியர்கள், தேவர்கள் ஆகிய அனைவரும் தன்னையே வணங்க வேண்டும், தன் பெயரையே உச்சரிக்க வேண்டும் என்று ஆணையிட்டான். மேலும் தைத்திய குலத்திற்கு விஷ்ணு விரோதியாகக் கருதப்பட்டான். எனவே பகைவனின் பெயரை யாரும் சொல்லக் கூடாது என்பது ஹிரண்யனின் கட்டளை. இந்நிலையில் பிரகலாதன் என்ற குழந்தை பிறந்தது. குழந்தை ஒரளவு வளர்ந்தவுடன் ஒர் ஆசிரியனை நியமித்து அக்குழந்தைக்குக் கல்வி புகட்ட உத்தரவிட்டான். கல்வியைத் தொடங்கும் பொழுது விஷ்ணுவின் பெயரைச் சொல்லக் கூடாது என்றும், ஹிரண்யன் பெயரைச் சொல்ல வேண்டும் என்றும் குரு கட்டளையிட்டார். ஆனால் பிரகலாதன் அதற்கு இசைய வில்லை. அவன் விஷ்ணுவின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தான். சில காலம் கழித்து மகனின் கல்வி வளர்ச்சி எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அறிய ஹிரண்யன் பிள்ளையையும், ஆசிரியரையும் வரவழைத்தான். மகனுடைய கல்வியைச் சோதிக்க எண்ணிய ஹிரண்யன் என்ன கற்றுக் கொண்டாய்? என்று கேட்டான். பிரகலாதன் விஷ்ணுவின் நாமத்தைச் சொல்லி அவன் பெருமையைச் சொல்லத் துவங்கினான். எல்லையற்ற கோபம் கொண்ட ஹிரண்யன் 'யார் அந்த விஷ்ணு?’ என்று கேட்டான். பிரகலாதன், "தந்தையே! அந்த விஷ்ணு உன்னுள்ளும் இருக்கிறான், என்னுள்ளும் இருக்கிறான். காணப்படுகின்ற எல்லாவற்றுக் குள்ளும் இருக்கிறான். என்று கூறினவுடன் எல்லையற்ற சினம் கொண்டான் ஹிரண்யன். தைத்திய சேனையை விட்டு இப்பிள்ளையைக் கொன்று விடுங்கள் என்றான். அவர்கள் எத்தனை ஆயுதங்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் நடைபெற வில்லை. ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகளை விட்டுப் பிரகலாதனைக் கடிக்கச் செய்தார்கள். ஒன்றும் நடைபெற வில்லை. கையையும் காலையும் கட்டி அரண்மனையில் இருந்து கீழே எறிந்தார்கள். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. ஆசிரியரை அழைத்து, 'மறுபடியும் இவனைக் கூட்டிக் கொண்டுபோய் நல்ல முறையில் கல்வி கற்பியுங்கள் என்று கூறினான். எவ்விதப் பயனும் விளையவில்லை. இம்முறை சுக்ர நியதியின்படி பகைவர்களை எப்படி வெல்ல வேண்டும் என்று ஆசிரியர்கள் கற்பித்தார்கள். பல நூறு ஆண்டுகள் கழித்து மறுபடியும் பிள்ளையை வரவழைத்தான். இந்த முறை விஷ்ணுவைப் பற்றிப் பேச்செடுக்காமல் 'சுக்ரநீதியின்படி பகைவர்களை எவ்வாறு வெல்வது?’ என்று கேட்டான் ஹிரண்யன். அதற்குப் பிரகலாதன் "பகைவர்கள் என்று யாரும் இல்லை. எல்லோரிலும்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 4 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஹிரண்யன், வேண்டும், பிரகலாதன், விஷ்ணு, அவன், கேட்டான், துருவன், ஒன்றும், வில்லை, இருக்கிறான், யாரும், கல்வி, விஷ்ணுவின்