விஷ்ணு புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
ஒரு காலத்தில் பிரம்மன் தமக்கு ஒரு அழகிய புத்திரன் வேண்டும் என்று நினைத்தார். உடனே அவர் மடியில் அழகிய ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. கிடந்த குழந்தை ஒயாது அழுது கொண்டே இருந்தது. அழுகையை நிறுத்த வேண்டுமானால் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அக்குழந்தை சொல்லிற்று. நான்முகன் அழுகின்ற குழந்தைக்கு 'ருத்திரன்' என்று பெயரிட்டார். சிலநேரம் மகிழ்ச்சியாக இருந்த குழந்தை மறுபடியும் அழத் துவங்கியது. நான்முகனால் அவ்வழுகையை நிறுத்த முடியவில்லை. முன்னமும் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்றுதானே இந்தக் குழந்தை அழுதது. எனவே புதுப்புதுப் பெயராக பிரம்மன் பெயர் சூட்டினார். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. ஏழாவது பெயர் சூட்டப்பட்டவுடன்தான் குழந்தையின் அழுகை நின்றது. பிரம்மன் ருத்திரனுக்கு சூட்டிய ஏழு பெயர்கள் வருமாறு:
பவ, சர்வ, மகேச, பசுபதி, பீம, உக்ர, மகாதேவ என்பனவாம். உருத்திரன், சதி என்பவளை மணந்து கொண்டான். சதியின் தந்தையாகிய தட்சன் செய்த யாகத்தில் உருத்திரனை அவமானம் செய்ததால் சதி உயிரை விட்டு, மறுபடியும் உமா என்ற பெயருடன் இமயமலை மகளாகப் பிறந்தாள். அவளை விரும்பி ருத்திரன் மணந்து கொண்டார்.
இலக்குமியின் தோற்றம்
முன்னொரு காலத்தில் மகாதேவன் வழியில் வந்த துர்வாச முனிவர் உலகம் முழுவதிலும் சுற்றித் திரிந்தார். ஒருமுறை ஒரு அழகிய பெண், வனப்பு வாய்ந்த மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு துர்வாசர் எதிரில் வந்தாள். அம் மாலையில் விருப்பம் கொண்ட துர்வாசர் அம்மாலையைக் கேட்டார். அப்பெண் மகிழ்ச்சியுடன் அம்மாலையை துர்வாசருக்குத் தந்தாள். அவள் தந்த மாலையைத் தலையில் அணிந்துகொண்டு பலவிடங்களிலும் சுற்றித் திரிந்தார் துர்வாசர். ஒருமுறை தன்னுடைய யானையாகிய ஐராவதத்தில் எதிர்கொண்டு இந்திரன் ஊர்வலம் வந்தான். துர்வாசர் தன்னுடைய தலையில் இருந்த அந்த மாலையை எடுத்து இந்திரனுக்குக் கிடைக்குமாறு தூக்கிப் போட்டார். அதன் சிறப்பை அறியாத தேவர்கள் தலைவன், அந்த மாலையை வாங்கி ஐராவதத்தின் மத்தகத்தின் மேல் வைத்து விட்டான். அற்புதமான வாசனையைக் கண்ட ஐராவதம் மேலும் அந்த வாசனையை அனுபவிப்பதற்காக மாலையின் பக்கமாகத் தனது துதிக்கையை நீட்டிற்று. ஆனால் மாலை தவறிக் கீழே விழுந்து விட்டது. மண்ணில் விழுந்த மாலையைக் கண்ட துர்வாசர் மிக்க சினம் கொண்டார். இந்திரன் எவ்வளவு மன்றாடி மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. இலட்சுமி உன்னை விட்டுப் போய்விடுவாள் என்று சாபமிட்டார். இந்திரன் அமராவதி திரும்பிச் சென்றவுடன் அந்நகரமே பாழ்பட்டுச் சீரழிந்து காணப்பட்டது. காரணம், இலக்குமி அதை விட்டுப் போய்விட்டதுதான். திகைத்துப் போன இந்திரன் தேவருடன் சேர்ந்து பிரம்மனிடம் சென்று நடந்ததைக் கூறினான். நான்முகன் இது என்னால் தீர்த்து வைக்கப்படக் கூடியது அன்று. வாருங்கள். விஷ்ணுவிடம் சென்று தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இந்திரன் முதலானவர்களை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றார். விஷ்ணு பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை உண்டால் அசுரர்களை வெல்லலாம் என்று கூறினார். அப்படியே செய்வதென்று முடிவாயிற்று. ஆனால் பாற்கடலை தேவர்கள் மட்டும் கடைய முடியாது. அசுரர்களின் உதவியும் தேவை. எனவே அசுரர்களை அழைத்து இதனைச் செய்தால் கிடைக்கும் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு தருவதாக தேவர்கள் பொய் கூறினார்கள். இதை அறியாத அசுரர்கள் முயற்சியுடன் கைகொடுக்க முன்வந்தனர். மேரு மலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி திருமால் கொண்ட மிகப் பெரிய
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 2 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, துர்வாசர், இந்திரன், குழந்தை, பெயர், தேவர்கள், அந்த, அழகிய, வேண்டும், பிரம்மன்